அயர்லாந்து நாட்டின் மொத்த ஜனத் தொகையில் 92 சதவிகிதம், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அது மாத்திரமல்ல, கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும் நாடுகளில் முதல் இடம் பெற்ற நாடு அயர்லாந்து. போப் மறைவுக்கு, அரசு துக்கம் அனுஷ்டிக்காது என்று அந்த நாட்டுப் பிரதமர் திட்டவட்டமாகக் கூறி விட்டார். காரணம், 92 சதவிகித கத்தோலிக்கர்கள் இருந்தாலும், அரசாங்கம் மதச் சார்பில்லாத அரசாங்கமானதால், அரசு துக்கம் அறிவிக்கக் கூடாது என்கிற அரசியல் தத்துவம் தான். பழமையான கத்தோலிக்க அயர்லாந்தில் இப்படி என்றால், 90 சதவிகிதம் கத்தோலிக்கர்கள் நிறைந்த பிரான்ஸ் நாட்டிலும் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படவில்லை. அங்கு அரசாங்கம் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டதற்காக, மதச்சார்பற்ற தலைவர்கள் பிரான்ஸ் நாட்டு அதிபரை கண்டித்தது மாத்திரமல்ல "அவர் ஏன் போப் அவர்கள் அடக்கத்துக்குப் போக வேண்டும்?' என்றும் கேட்டனர்.இந்த இரண்டு கிறிஸ்தவ நாடுகள் மட்டுமல்ல. வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளான கிட்டத்தட்ட எல்லா கிறிஸ்தவ நாடுகளுமே இப்படித் தான் நடந்து கொண்டன. கிறிஸ்தவ நாடான அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவில் உள்ள பல கிறிஸ்தவ நாடுகளிலும் சரி, அரசு தேசிய துக்கம் அனுஷ்டிக்கவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ரஷ்யா, கிரீஸ், போர்ச்சுகல் போன்ற எந்த கிறிஸ்தவ நாடும் தேசிய துக்கம் அனுஷ்டிக்கவில்லை. ஏன்... முழு கத்தோலிக்க நாடான ஸ்பெயின் கூட அப்படிச் செய்யவில்லை.நாம் மட்டும் ஏன் அப்படிச் செய்தோம்? நமக்கு இந்த வகையில் முன்னோடி யார்? இத்தாலிய நாடு தான். போப் மறைந்தவுடன் இத்தாலிய அரசு, "மூன்று நாள் துக்கம்' என்று அறிவித்தது. உடனேயே இந்திய அரசும் அப்படியே செய்தது.
மதச்சார்பற்ற பாரதம், போயும் போயும் முழு கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான இத்தாலியை ஏன் முன்னோடியாகக் கொள்ள வேண்டும்? இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் என்ன சம்பந்தம்?இன்னொரு கேள்வி போப், மத குரு அல்ல; வாட்டிகன் அதிபர் என்றால், எப்படி நம் நாட்டிலிருந்து மூன்று ஆர்ச் பிஷப்புகள், புது போப் அதாவது வாட்டிகன் நாட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக "வோட்டு' போடுகின்றனர்? மற்றொரு நாட்டு வாட்டிகன் நாட்டு அதிபர் தேர்தலில் வோட்டு போடும் அவர்கள், நம் நாட்டு குடியுரிமை பெற்றவர்களா அல்லது வாட்டிகன் நாட்டு குடியுரிமை பெற்றவர்களா?
- நன்றி : தினமலர்.
Thursday, May 05, 2005 at 8:18 AM